×

மக்களுடன் முதல்வர் முகாமில் விண்ணப்பித்த 50 பேருக்கு முதியோர் ஓய்வூதியம் உத்தரவு வழங்கல்

 

சத்தியமங்கலம், பிப்.12: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி பு.புளியம்பட்டி நகராட்சியில் இரு கட்டங்களாக நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமில் முதியோர் ஓய்வூதிய தொகை உள்ளிட்ட பல்வேறு வகையான விண்ணப்பங்களை பொதுமக்கள் அளித்திருந்தனர். இதில் முதற்கட்டமாக 50 பேருக்கு மாதாந்திர முதியோர் ஓய்வூதியம் மற்றும் கைம்பெண் ஓய்வூதியம் வழங்குவதற்கான உத்தரவுகள் வரப்பெற்றது.  இந்த உத்தரவுகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி பு.புளியம்பட்டி நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி தலைவர் ஜனார்த்தனன், துணை தலைவர் பி.ஏ.சிதம்பரம் ஆகியோர் பயனாளிகள் 50 பேருக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவதற்கான உத்தரவாத படிவங்களை வழங்கினர். இந்நிகழ்ச்சியில், நகராட்சி கவுன்சிலர்கள் முரளி கிருஷ்ணன், இப்ராம்ஷா, முன்னாள் கவுன்சிலர் ஈஸ்வரமூர்த்தி, வார்டு செயலாளர்கள் முருகேஷ், நாகலிங்கம், மோகனசுந்தரம், செயற்குழு உறுப்பினர் சந்தானபாரதி, இளைஞரணி துணை அமைப்பாளர் சசிகுமார், பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post மக்களுடன் முதல்வர் முகாமில் விண்ணப்பித்த 50 பேருக்கு முதியோர் ஓய்வூதியம் உத்தரவு வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Sathyamangalam ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stal ,Puliambatti Municipality ,
× RELATED பெரும்பள்ளம் அணை பகுதியில் பகல் நேரத்தில் சுற்றித்திரியும் காட்டு யானை